ஒப்பற்ற கவிதை வரைய ~ என்
காதல் ஒரு தலைக்காதல் அல்ல ~ நண்பா
சந்தோஷம் துக்கம்
இன்பம் துன்பம்
பரிவு பாசம்
மூச்சு பேச்சு
வாக்கு
இவை போல
எனக்கு என்னவன் ஓர் உணர்வு!
என் உயிரிலும் ~ அவனை
பொதித்து வைத்திருக்கிறேன் ~ என்
கிறுக்கல்களையும்
கவிதை என்று ரசித்தவன்
புன்னகை தவழும்
குறும்பு கொப்பளிக்கும் ~ அவன்
முதன்பார்வையிலே
கரம் பற்ற சம்மதித்தேன்...!
அவன் அன்பு...,
கண்ணியம்
அக்கறை
இன்னமும்
அவன் கோபம்
அவன் சிறு மறதிகள்
என என்னவனின் ஒவ்வொரு அசைவையும்
முழுமையாய் ரசித்தவள் ~ நான்
இன்று.....!!!!!
நிரந்தரமான ஓய்வு
நிம்மதியானத் தூக்கம்
கவலையில்லாத வாழ்வு
கனவுகள் இல்லாத உலகம்
இப்படி எண்ணி
கல்லறைக்குள்
கண்ணயர்ந்து விட்டான்..? ~ என் மனசு
மெளனத்தின் ஓரத்தில்
நெஞ்சின் ஈரத்தில்
இராத்திரியில் கனவுகள்
பகலில் அவன் நினைவுகள்
இதுதான் என் வாழ்க்கை..!!!
என்னவன் எனக்குள்ளே....
சத்தமே இல்லாமல் இன்று
என் கவிதைக்குள்
கவிதை ஆனான்.......!
No comments:
Post a Comment