செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Wednesday, August 24, 2011

காதல் ஒரு தலைக்காதல் அல்ல ~ நண்பா


ஒப்பற்ற கவிதை வரைய ~ என்

காதல் ஒரு தலைக்காதல் அல்ல ~ நண்பா

சந்தோஷம் துக்கம்

இன்பம் துன்பம்

பரிவு பாசம்

மூச்சு பேச்சு

வாக்கு

இவை போல

எனக்கு என்னவன் ஓர் உணர்வு!

என் உயிரிலும் ~ அவனை

பொதித்து வைத்திருக்கிறேன் ~ என் 

கிறுக்கல்களையும்

கவிதை என்று ரசித்தவன்

புன்னகை தவழும் 

குறும்பு கொப்பளிக்கும் ~ அவன்

முதன்பார்வையிலே

கரம் பற்ற சம்மதித்தேன்...!

அவன் அன்பு...,

கண்ணியம்

அக்கறை

இன்னமும்

அவன் கோபம்

அவன் சிறு மறதிகள்

என என்னவனின் ஒவ்வொரு அசைவையும்

முழுமையாய் ரசித்தவள் ~ நான்

இன்று.....!!!!!

நிரந்தரமான ஓய்வு 

நிம்மதியானத் தூக்கம் 

கவலையில்லாத வாழ்வு 

கனவுகள் இல்லாத உலகம் 

இப்படி எண்ணி 

கல்லறைக்குள் 

கண்ணயர்ந்து விட்டான்..? ~ என் மனசு

மெளனத்தின் ஓரத்தில்

நெஞ்சின் ஈரத்தில்

இராத்திரியில் கனவுகள்

பகலில் அவன் நினைவுகள்

இதுதான் என் வாழ்க்கை..!!!

என்னவன் எனக்குள்ளே....

சத்தமே இல்லாமல் இன்று

என் கவிதைக்குள்

கவிதை ஆனான்.......!

No comments:

Post a Comment