செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Thursday, September 8, 2011

முதல் ரோஜா

முதல் முதல்
புன்னகை முகத்தோடு
கையிலே ரோஜா மலரோடு
கல்லூரி வாசலிலே ~ நீ காத்திருந்த
ஞாபகம் எப்போது நினைத்தாலும்
என்னை மலரவைக்கும்....!!!!

விழியோர கனவு

கனவிலாவது என்னோடு ~ ஒரு
நிமிடம் பேசிவிடு ~ உன்
திருமுகத்தை ஒரு முறை ~ என்
கண்ணில் வைத்து விடு..!!!

விழியோரம் வருகின்ற ~ கண்ணீரை
உன் கையால் துடைத்து விடு
உன் நினைவாக நான் இருப்பேன் ~ என்று
சொல்லி விட்டு சென்று விடு..!!!

நீயே என் கவிதை

கவிதை எழுத ஆர்வம்
தந்தவனும் நீயே ~ இன்று
கவிதை எழுத வைத்த
கவிஞனும் ~ நீயே
என் கவிதைக்குள்
கவிதை ஆனவனும் ~ நீயே

கவிதைக்குப் பொய் அழகு

கவிதைக்குப்
பொய் அழகாம்
என் கவிதையும் கூட ~ ஆனால்
பொய்யான நிஜம்
என் கனவுகளே
இன்று கவிதையாய்!

காதலிக்கும் நிழல்

உண்மைக் காதலரின் நிழல்கள்
எப்போதும் பேசும், காதலிக்கும்...
நீயும் காதலித்துப்பார்
உன் நிழலும் பேசும் காதலிக்கும்..
.

உனது பெயர்

கைகளில் உன் ~ பேரெழுதி
கன்னத்தில் வைத்துக்
கண்மூடும் போதும்……
நீ ~ எனக்கு
மிக அருகில்
இருப்பதாய் உணர்கிறேன்…

Friday, August 26, 2011

உனக்காய் உயிர்க்கவே

உனக்காய் உயிர்க்கவே
ஆசைப்படுகின்றேன்
உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்

அன்பே உன் பார்வை

சலனமற்றுக் கிடந்த
என் மனக்குளத்தில்
உன் பார்வை கணையை
எய்துவிட்டாய் ~ நீ
இல்லாம் என்னால் ~ இனி
சுவாசிக்க முடியாது
அன்பே..!!!

பாதுகாப்பு

என் காதலையும்
கவலையையும்
சொல்லிவிட முடியாத அளவுக்கு
காவல் அதிகம்
என்பதால்~துணைக்கு
என் கவிதைகளை
அழைத்துவந்தேன்
பாதுகாப்பாக...!

உன் ஞாபகங்கள்..!


பூட்டி விட்டு
கண்களை இருக்க
மூடிக் கொண்டு ~ தான்
தூங்கினேன்...!
அப்படி இருந்தும்
உள்ளே புகுந்து
உதைக்கின்றன
உன் ஞாபகங்கள்..!
தூங்கத் துடிக்கிற
ஒவ்வொரு இரவும்
தூங்க விடாமல்~உன் 
ஞாபகங்கள் என்னை
தட்டி தட்டி எழுப்பி
கதை பேசுகிறது.....!

Wednesday, August 24, 2011

காதல் ஒரு தலைக்காதல் அல்ல ~ நண்பா


ஒப்பற்ற கவிதை வரைய ~ என்

காதல் ஒரு தலைக்காதல் அல்ல ~ நண்பா

சந்தோஷம் துக்கம்

இன்பம் துன்பம்

பரிவு பாசம்

மூச்சு பேச்சு

வாக்கு

இவை போல

எனக்கு என்னவன் ஓர் உணர்வு!

என் உயிரிலும் ~ அவனை

பொதித்து வைத்திருக்கிறேன் ~ என் 

கிறுக்கல்களையும்

கவிதை என்று ரசித்தவன்

புன்னகை தவழும் 

குறும்பு கொப்பளிக்கும் ~ அவன்

முதன்பார்வையிலே

கரம் பற்ற சம்மதித்தேன்...!

அவன் அன்பு...,

கண்ணியம்

அக்கறை

இன்னமும்

அவன் கோபம்

அவன் சிறு மறதிகள்

என என்னவனின் ஒவ்வொரு அசைவையும்

முழுமையாய் ரசித்தவள் ~ நான்

இன்று.....!!!!!

நிரந்தரமான ஓய்வு 

நிம்மதியானத் தூக்கம் 

கவலையில்லாத வாழ்வு 

கனவுகள் இல்லாத உலகம் 

இப்படி எண்ணி 

கல்லறைக்குள் 

கண்ணயர்ந்து விட்டான்..? ~ என் மனசு

மெளனத்தின் ஓரத்தில்

நெஞ்சின் ஈரத்தில்

இராத்திரியில் கனவுகள்

பகலில் அவன் நினைவுகள்

இதுதான் என் வாழ்க்கை..!!!

என்னவன் எனக்குள்ளே....

சத்தமே இல்லாமல் இன்று

என் கவிதைக்குள்

கவிதை ஆனான்.......!

Friday, June 3, 2011

உன் ஞாபகங்கள்.

விரைவில் நைந்து
கிழிந்தே போகக்கூடும்..
நான் புரட்டிக் கொண்டேயிருக்கும்
உன் ஞாபகங்கள்.

நட்பு என்பது

நட்போடு
சுற்றும் நாட்களை விட
அதன்
நினைவோடு நடமாடும் நாட்கள்
சுகமானது ....
நட்பு என்பது
கடிகாரம் முள் போன்றது
எப்படி சுற்றினாலும்
எங்க சுற்றினாலும்
ஒரு முறை எங்கயாவது
சந்திக்கும் ........!!!.

கண்ணீர்

இனியவனே இன்று வெறும் ஞாபகங்களாகவே
நிலைத்துவிட்ட - என வசந்தகால
நினைவுகளுக்காக
நான் ஒன்று மட்டும் செய்து கொள்கிறேன்!!!
நீ கற்றுத் தந்த கவிதைகளை
கண்ணீரால் மட்டுமே எழுதுகிறேன்!!!

கண்மணியில்

மனசை பறி கொடுத்தேன்
உன்னிடத்தில்
மீளப் பெற முடியாமல்
தவிக்கிறேன் உயிரோடு....
காதல் என்ற வார்த்தையை
நான் கேட்கும் போது
உன் முகம் மட்டுமே
என் கண்மணியில் தோன்றுகின்றது..
என் அன்பே...!

தலைகனம்

ஆம் நீ சொல்வது போல் எனக்கு
தலைகனம் அதிகம் தான்....
என் மூளையின் ஒவ்வொரு
அணுவிலும் நீ குடியிருப்பதினால்...

கனவுகள்

கனவுகள் அத்தனையும்
கற்பனை தான்...
நீ என்னை
காதலிப்பதாக கூறியதும்
கனவில் தான்...

உன்னைப் பற்றி!...

என்
கவிதைகள்தான்
எனக்கு
முதல்
துரோகி!!!
எழுதுவது
நான்!
பேசுவதெல்லாம்
உன்னைப்
பற்றி!...

இனிமை.. !

இரவு என்பது
பகலின் நிழல்,
காதல் என்பது
கண்ணீரின் நிழல்,
நட்பு என்பது
நம்பிக்கையின் நிஜம்,
நிழலாக இருப்பதைவிட
நிஜமாக இருப்பது இனிமை.. !

என்னவனே !

என்னவனே !
கவிதை என்றால்
உனக்கு ரெம்ப பிடிக்கும்... !
உன்னை நினைத்து
கவிதை எழுதுவது
மட்டும்தான்
எனக்கு பிடிக்கும்..... !!!

தூய்மையான , நட்பு !!!

உங்கள்
மனங்களில்
தேடுகிறேன் !
உண்மையான ,
வெண்மையான ,
தூய்மையான ,
நட்பை !!!

கண் தானம் செய்வோம்!

உன் கண்களால் அழகிய காட்சிகளை 
காணும் மனிதா... ..
உன் முடிவில் நீயும் தானம் செய் .....
அழியாமல் இருக்கும் உன் விழிகள்.....!

உதடுகள்

உதடுகள்
சொல்கிறது
உன்னுடன்
பேசும்போது
"நலம்" என்று...
ஆனால்
கண்கள் சொல்கிறது
உன்னை
காணத நாட்கள்
"நரகம்" என்று..

மிஞ்சியது - உன் காதல்!

உன் நினைவுகளை
கேட்டு வாங்கியதில்
கவிதையாக மட்டுமே
மிஞ்சியது -
உன் காதல்!

மொழிப் பெயர்ப்பு

எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு

"தாஜ்மஹால்"

காதலின் சின்னம் கேட்டேன்
அவன் கல்லறை (தாஜ்மஹால்) என்றான்..
கல்லறைக்கு வழி கேட்டேன்...
என்னை காதலி என்றான்......

உன்னை காத‌லிக்க‌ ம‌ட்டுமே

எதை இழ‌ந்து தேடினாலும்
நீயே கிடைக்க‌ பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து
எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ
அவைக‌ளே நீயாகிறாய்
பின் என்ன‌தான் செய்வ‌தாம்
உன்னை காத‌லிக்க‌ ம‌ட்டுமே செய்வ‌தை த‌விற!

தெரியவில்லை

இப்பொழுதெல்லாம்..
உன் நினைவுகள்தான்
என் புதுக்கவிதைகள்.
முற்றுப்புள்ளிகளாய்...
கண்ணிர்த் துளிகள்!!

ஏனோ அழுகிறேன்..
ஏனோ ஏங்குகிறேன்..
உனக்காகவா?இல்லை..,
உன்னாலா?
தெரியவில்லை

உன் ஞாபகங்கள்...!

இறந்தாலும் இறக்காமல்
எனக்குள் உறங்கிக் கிடக்கும்
உன் ஞாபகங்கள்...!

என்னுள் உன்னை!!!!

மற்றவர்
பதிக்கத் தான்
முயல்வார்கள்
ஆனால் நீயோ
புதைத்துவிட்டாய்
என்னுள் உன்னை!!!!

நீயே கிடைக்க‌ பெறுகிறாய்

எதை இழ‌ந்து தேடினாலும்
நீயே கிடைக்க‌ பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து
எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ
அவைக‌ளே நீயாகிறாய்
பின் என்ன‌தான் செய்வ‌தாம்
உன்னை காத‌லிக்க‌ ம‌ட்டுமே செய்வ‌தை த‌விற!
நீ
எரியும் நெருப்பா ?
இல்லை !
கொட்டும் மழையா ?

மழையாய் உந்தன் வார்தைகள்
என்னை நனைத்தாலும் !!

நெருப்பாய் உன் நினைவுகள்
என்னை சுடுகின்றன....!!

நட்பின் மூலிகை....

என் மனசுக்கு
சுகமில்லை
எந்த மூலிகை
குணப்படுத்தும் ?
சில நாழிகை -உன்
நட்பின் மடியில்
தலை சாய்த்துக்
கொள்வதைத் தவிர.. ???

யுவராஜா....உன் பெயராக தான்

என் நினைவுகளுக்கு
செல்ல பெயர் வைத்தால்
அன்பே....
அது உன் பெயராக தான் இருக்கும்...
அங்கேயும் எப்போதும் உன் நினைவுகளே.

என் காவிய காதல்

உன்னை பார்த்த ...
விநாடி முதல்.........
எழுத தொடங்கினேன் .........
கவிதையை.............
புத்தகத்தில் அல்ல...............
ன் இதயத்தில்...............
காவியமாய்......................

போதை

கடைக்கண் பார்வையெல்லாம் தேவையில்லை
நீ கண் திறந்து என்னை
பார்ப்பதாக நினைத்துகொண்டாலே
போதை தலைஏறிவிடுகிறது

பயணம் உன்னுடன் மட்டும்....

பயணம் இனிமையாகிறது!
ஜன்னலருகில் இடம் கிடைத்தாலும்
உன்னருகில் இடம் கிடைத்தாலும்...

வானத்தை போல நீ

வானத்தை போல நீ
உயர
நினைக்கிறாய்...
நம்பிக்கை கொள்,
உனக்கு நானொரு
ஊன்றுகோலாய்
நிச்சயம் நான்
இருப்பேன்!.

Miss u

பசியாயிருக்கிறது
உன் வார்த்தைகளை மட்டும்
பரிமாறு...

விதி....

விலகி விலகிப் போனாலும்
விடுவதில்லை விதி....
எங்கோ இருந்த என்னையும்....
எங்கயோ இருந்த
உன்னையும்....
சேர்த்து வைத்து
வேண்டாம் என்றிருந்த
காதலையும்
வேதமாய் மாற்றி வைத்து
பசி பறித்து...
உறக்கம் கலைத்து...
சிந்தை எங்கும் உன் நினைவு
பரப்பி...
உன் மேல் பைத்தியமாய்
எனை மாற்றி விட்டு...
இன்று பார்த்துச் சிரிக்கின்றது
"பார்த்தாயா வென்றுவிட்டேன் நான்"
என்று!!!!!!!

Tuesday, April 19, 2011

நான் சேமித்த காதல்


இது நீ சொன்ன கதை!!!


ரோஜா


சுமை


வாழ முடியுமா?


இரவின் தனிமை


வருத்தம்


என் நேரம்!!!!


இனிய கனவு


நீல வானம்


Tuesday, April 12, 2011

என் நாட் குறிப்பு


என்னை பிரியாமல்


புன்னகை


என்ன பயன்


ஏதேதோ


உன் தரிசனம்


என்னவன்


தினம் தினம்


நீ


உயிருக்குள்


நிலா


கற்பனை


விவாகரத்து


கண்ணீர்


முதல் முதலாய்


உன் காதல்


என் அகராதி


என் இதயம்



என் விழிகள்

Saturday, April 2, 2011

காதல்


காதல் என்பது போர்க்களமா..? அதில்
வெற்றி கொள்ளத் தோற்கணுமா..?
காதல் என்பது ஓவியமா..? அதை
ரெண்டு பேருமாய் எழுதணுமா..?
காதல் என்பது காவியமா..? அதில்
கண்ணீர்த் துளிகள் நிரந்தரமா..?

காதல் என்பது புண்ணியமா..? அதில்
புனிதம் காப்பது அவசியமா..?
காதல் என்பது பொய்மாயமா..? ரெட்டை
வாழ்க்கை வாழ்வது நிதர்சனமா..?
காதல் என்பது செந்நிறமா..? சம
நீதிகள் அதில்தான் சாத்தியமா..?
காதல் என்பது தாய்மனமா..? இனை
கஷ்டத்தில் தானாகத் துடித்திடுமா..?

காதல் என்பது மலர்வனமா..? சிறு
சந்தோஷங்களின் பிறப்பிடமா...?
காதல் என்பது ஆத்திகாமா..? அவன்
காலடி மண்ணும் பிரசாதமா..?
காதல் என்பது நித்திலமா..? அது பல
சிப்பிகள் இடையே பூத்திடுமா..?
காதல் என்பது தத்துவமா..? சாகும்
வரையினில் கூடே தொடர்ந்திடுமா...?



தினம் தினம் இறப்பு


From U....Dear


From U....Dear


தனிமையில் நான்


உன் அழகில்;

உன்னை விட எத்தனையோ பேர்
எனக்கு அழகாக -
தெரிந்திருக்கிறார்கள்;

ஆனால் -
உன் அழகில்; நீ மட்டுமே இருந்தாய்,

இதயத்தையும் -
நீ மட்டுமே எடுத்துக் கொண்டாய்!

Friday, April 1, 2011

முடிவில்

உன்னிடமிருந்து

விலகும் முயற்சியின்..முடிவில்,


உன்னைத்தான் வந்தடைகிறேன்
!

என் புதுக்கவிதைகள்.

இப்பொழுதெல்லாம்..

உன் நினைவுகள்தான்


என் புதுக்கவிதைகள்.


முற்றுப்புள்ளிகளாய்...


கண்ணிர்த் துளிகள்!!



ஏனோ அழுகிறேன்..

ஏனோ ஏங்குகிறேன்..


உனக்காகவா?இல்லை..,


உன்னாலா?


தெரியவில்லை

மரணித்த நிமிடங்கள்


காதல் நினைவுகள்


உன் நினைவுகள்


உன் நினைவுகளுடன்.....நிலா


என் அருகில் நீ இருந்த நாட்களில்
உன் கண்களை பார்த்து காதல் செய்த கண்களுக்கு
நீ கொடுத்த பரிசு கண்ணீர் துளி

நீ கண்ணீரை என் கண்களுக்கு 
பரிசாக கொடுத்து பிரிந்துவிட்டாய்
என் கண்களில் நீ கொடுத்த கண்ணீர் வரமாய் ஆனது

என் அருகில் நீ இன்று இல்லை
நீ கொடுத்த வரத்தை
என் கண்களும் இழக்கவும் இல்லை

இலக்காத வரத்தோடு வாழ்கிறேன்
உன் நினைவுகளுடன்.....

Thursday, March 31, 2011

பிரிவு





இதயத்தின் சுவாசமே

எனைவிட்டு நீங்கிய சுவாசமே
என் இதயத்தைவிட்டு நீ நீங்கவில்லை
நான் உலகைவிட்டு நீங்கும் வரை
என் இதயத்தைவிட்டு நீ நீங்குவதில்லை
நான் வாழும் வரை
நீதான் எந்தன் இதயத்தின் சுவாசமே

உன் கவிதை


வண்ணங்கள் பூசி என் இதயத்தை 
வானவில்லாக மாற்றிய உன் கவிதைக்கு

குருதியால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறேன்...
உன் பூபோன்ற பாதங்கள் கொண்டு அடி எடுத்து வை...;
என் இதயத்தில் - அதை தொட்டிலாக கட்டி ஆரிராரோ பாடுகிறேன்
உன் மழலை சிந்தும் மொழிகளுக்கு..

உன் நினைவு


 உன் நினைவுகளால் உறக்கம்
தொலைத்தப் பல இரவுகளின்
காலப் பெருவெளியில்
இன்னும் கடந்துகொண்டிருக்கின்றேன் .

கைகளில் ஆயிதம் இல்லை
கற்பனைகளுடன் தினமும் மோதி மோதி
காயப்படுகிறது நிஜங்கள் .

நிலவின் வயதென்ன..



உள்ளத்தின் தவிப்பு


Wednesday, March 30, 2011

உண்மையான நட்பு

நம் இருவரின் நட்புக்கு முன்னால்
இவ்வுலகம் மிக சிறியது!!!
நட்சத்திரத்தை கூட எண்ணிவிடலாம்
ஆனால்...,
நம்முடய நட்பின் அன்பை எண்ண
முடியாது...!!
கண்களால் காதல் வந்ததாம்
நம்மால் தான் நட்பு வந்ததோ?
நட்பு என்னும் காட்டுக்குள்ளே
இரு பறவைகள் போல வாழ்வோம்
நீ வேரு நான் வேரு இல்லை
ஒன்றுதான் என்றது நம் நட்பு
விலை மதிக்க முடியாத முத்து போன்ற
நம் நட்பை....
பிரிக்க மரணத்தாலும் கூடாது!!!

சுனாமி கூட
நம் உண்மையான நட்பின்
முன்னால் தலை வணங்கிடும் நண்பா.../தோழி.

நீ எனக்கு

நீ எனக்கு
தெய்வம்தான்
நீ என்னைவிட்டு
விலகுவதும் இல்லை
என்னைக் கைவிடுவதுமில்லை...

நிலாவே நீயும் நானும் ஒன்றே....



Valentine's Day Dear Friends

என் கவிதை

கவிதை எழுத அமரும்
போதெல்லாம் கவிதை
வருவதில்லை

ஆனால்

காற்று வாங்க கடற்கரையில்
அமர்ந்திருந்தால்- நீ
வந்துவிடுகிறாய்
கூடவே
என் கவிதையையும்
கூட்டிக்கொண்டு....

இதய அறை

என்றாவது ஒரு நாள்
உன்னிடம் வந்து சேருவோம்..;
என்ற நம்பிக்கையில் என் அறையில்
ரகசியமாய் பதுக்கப்படுகின்றன .... உனக்காக
நான் வாங்கிய பரிசு பொருட்களும்... என்
இதய அறையில் உனக்காக நான் சேமித்த காதலும்.

சிக்ஸர்

வேலி தாண்டல்தான்
ஆனாலும் வரவேற்கப்படுகிறது
சிக்ஸர்

இந்திய அணி

இந்திய அணிக்கு
வெற்றி மேல் வெற்றி
விளம்பரங்களில்

உன் பார்வையில் நான்

பார்வை பதிக்கிறாய்
நெஞ்சம் கிழிக்கிறாய்.
நீ குறிஞ்சி இதழா!!
நெருஞ்சி முள்ளா?