செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Thursday, March 31, 2011

பிரிவு





இதயத்தின் சுவாசமே

எனைவிட்டு நீங்கிய சுவாசமே
என் இதயத்தைவிட்டு நீ நீங்கவில்லை
நான் உலகைவிட்டு நீங்கும் வரை
என் இதயத்தைவிட்டு நீ நீங்குவதில்லை
நான் வாழும் வரை
நீதான் எந்தன் இதயத்தின் சுவாசமே

உன் கவிதை


வண்ணங்கள் பூசி என் இதயத்தை 
வானவில்லாக மாற்றிய உன் கவிதைக்கு

குருதியால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறேன்...
உன் பூபோன்ற பாதங்கள் கொண்டு அடி எடுத்து வை...;
என் இதயத்தில் - அதை தொட்டிலாக கட்டி ஆரிராரோ பாடுகிறேன்
உன் மழலை சிந்தும் மொழிகளுக்கு..

உன் நினைவு


 உன் நினைவுகளால் உறக்கம்
தொலைத்தப் பல இரவுகளின்
காலப் பெருவெளியில்
இன்னும் கடந்துகொண்டிருக்கின்றேன் .

கைகளில் ஆயிதம் இல்லை
கற்பனைகளுடன் தினமும் மோதி மோதி
காயப்படுகிறது நிஜங்கள் .

நிலவின் வயதென்ன..



உள்ளத்தின் தவிப்பு


Wednesday, March 30, 2011

உண்மையான நட்பு

நம் இருவரின் நட்புக்கு முன்னால்
இவ்வுலகம் மிக சிறியது!!!
நட்சத்திரத்தை கூட எண்ணிவிடலாம்
ஆனால்...,
நம்முடய நட்பின் அன்பை எண்ண
முடியாது...!!
கண்களால் காதல் வந்ததாம்
நம்மால் தான் நட்பு வந்ததோ?
நட்பு என்னும் காட்டுக்குள்ளே
இரு பறவைகள் போல வாழ்வோம்
நீ வேரு நான் வேரு இல்லை
ஒன்றுதான் என்றது நம் நட்பு
விலை மதிக்க முடியாத முத்து போன்ற
நம் நட்பை....
பிரிக்க மரணத்தாலும் கூடாது!!!

சுனாமி கூட
நம் உண்மையான நட்பின்
முன்னால் தலை வணங்கிடும் நண்பா.../தோழி.

நீ எனக்கு

நீ எனக்கு
தெய்வம்தான்
நீ என்னைவிட்டு
விலகுவதும் இல்லை
என்னைக் கைவிடுவதுமில்லை...

நிலாவே நீயும் நானும் ஒன்றே....



Valentine's Day Dear Friends

என் கவிதை

கவிதை எழுத அமரும்
போதெல்லாம் கவிதை
வருவதில்லை

ஆனால்

காற்று வாங்க கடற்கரையில்
அமர்ந்திருந்தால்- நீ
வந்துவிடுகிறாய்
கூடவே
என் கவிதையையும்
கூட்டிக்கொண்டு....

இதய அறை

என்றாவது ஒரு நாள்
உன்னிடம் வந்து சேருவோம்..;
என்ற நம்பிக்கையில் என் அறையில்
ரகசியமாய் பதுக்கப்படுகின்றன .... உனக்காக
நான் வாங்கிய பரிசு பொருட்களும்... என்
இதய அறையில் உனக்காக நான் சேமித்த காதலும்.

சிக்ஸர்

வேலி தாண்டல்தான்
ஆனாலும் வரவேற்கப்படுகிறது
சிக்ஸர்

இந்திய அணி

இந்திய அணிக்கு
வெற்றி மேல் வெற்றி
விளம்பரங்களில்

உன் பார்வையில் நான்

பார்வை பதிக்கிறாய்
நெஞ்சம் கிழிக்கிறாய்.
நீ குறிஞ்சி இதழா!!
நெருஞ்சி முள்ளா?